மட்டக்களப்பில் தீக்கிரையாக கடைகள்...!
மட்டக்களப்பில் கடைகள் சில தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (07-07-2026) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகளே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.
காவல்துறை தீயணைப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் காவல்துறை தீயணைப்பு பிரிவுள் இணைந்து 4 மணித்தியாலம் போராட்டத்தின் பின்னர் காலை 9.00 மணிக்கு பாரிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருந்த போதும் சென்றல் வீதியில் உள்ள சிறுவர் ஆடை விற்பனை கடை தொகுதி மற்றும் பஸார் வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி திருத்தும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

தங்க ஆபரண கடைகள் உட்பட ஐந்து கடைகள் சேதமேற்பட்டதுடன் இந்த இருவீதிகளுக்கும் தற்காலிகமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக மட்டு தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


