சந்தையில் கிடைக்கும் உணவுப்பொருட்கள் -மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sumithiran
காலாவதியான உணவுப் பொருட்கள்
தற்போது சந்தையில் கிடைக்கும் பொதி செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை வாங்கும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடைகளில் உணவுப் பொருட்களின் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதனால் சந்தையில் காலாவதியான உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் எஸ்.வை.போபிட்டியகே தெரிவித்தார்.
அவதானமாக இருங்கள்
எனவே மக்கள் அவறறை வாங்கும் போதும் அவற்றை உண்ணும் போதும் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இவற்றை கவனியாது உண்பதால் தேவையற்ற நோய்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 8 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்