வெளிநாட்டிலிருந்து வந்த அழகுக்கலை நிபுணர் கட்டுநாயக்காவில் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையைச்(sri lanka) சேர்ந்த இளம் பெண் பயணியான அழகுக்கலை நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடவத்தை சூரியபலுவ பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார். 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு சிகரெட்டுகள்
அவர் நேற்று (22) பிற்பகல் 03.30 மணிக்கு துபாயிலிருந்து (dubai)ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D-824 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் எடுத்துச் சென்ற பொதிகளில் 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன.
காவல்துறை பிணையில் விடுவிப்பு
அவரிடம் இருந்த 50 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பயணி தற்போது காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதவான் முன் முற்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
