கொத்து கொத்தான முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆயுர்வேத எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
Hair Growth
Beauty
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கப்
- வெந்தயம்- ¼ கப்
- நெல்லிக்காய் தூள்- ¼ கப்
- எள்- ¼ கப்
- செம்பருத்தி இதழ்- 10
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலை, வெந்தயம், எள் மற்றும் செம்பருத்தி இதழ்களை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவைக்கவும்.
- இப்போது அதில் நெல்லிக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இந்த பொடியை கலந்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
- பின் இந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
- இறுதியாக ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
