நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் - முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா…!
புதிய இணைப்பு
2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில், 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.
அதிக சுற்றுலாப் பயணிகள்
ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் 12 ஆம் திகதி வருகை தந்துள்ளதுடன் அன்று 7,585 பேர் வருகை தந்தனர்.
இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 18,220 ஆகும்.
அதற்கு அடுத்தப்படியாக அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 11,425 பேரும், ரஷ்யாவிலிருந்து 8,705 பேரும், ஜெர்மனியிலிருந்து 7,746 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நுவரெலியாவின் (Nuwara Eliya) கிரகரி வாவிக்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதைக் கழிப்பதற்காக வருகை தருகின்றனர்.
குறிப்பாக கிரகரி வாவி கரையோரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நுவரெலியா மாநகர சபை ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனா்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற சகல வசதிகளுடன் கூடிய ஏராளமான ஹோட்டல்களும் இப்பகுதிகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
