அதிகரித்து வரும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) நேற்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்
இந்த சூழ்நிலையில் கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இம்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
