தமிழக முதல்வர் மீது அவதூறான கருத்துக்களை பதிவு செய்த பா.ஜ. க ஆதரவாளர் கைது
இந்திய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடர்பாக அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததன் பெயரில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் விமர்சகரும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளரான கிஷோர் கே சுவாமிமயே இக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் எற்பட்ட வெள்ளம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலினின் செயலை அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டர் தளத்தில் பதிவை மேற்கொண்டதின் காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழு வழக்குகள்
இதுகுறித்து, சென்னை, எழும்பூர் பகுதியை சேர்ந்த இம்ரான் காவல்துறை உயர் அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு அளி்த்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல்துறை மேற்கொண்ட விசாரணை மூலம் கிஷோர் கே சுவாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்துள்ளது.
இந்த குற்றச்செயலை கருத்தில் கொண்ட காவல்துறையினர் இவரை கைதுசெய்துள்ளனர்.
இவர் மீது, ஏற்கனவே ஏழு வழக்குகள் பதிவாகி, கைது செய்யப்பட்டார். இந்தாண்டு ஜீன் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.