கறுப்பு டொலர்களை வெள்ளை டொலர்களாக மாற்றும் திட்டம்! சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திடுக்கிடும் தகவல்
சிறிலங்காவில் அடுத்த வாரத்தில் கறுப்பு டொலர்களை வெள்ளை டொலர்களாக மாற்றும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
2022ஆம் ஆண்டு உள்ளுாராட்சி சபைகளின் தேர்தல்களை அரசாங்கம் நடத்திக்காட்டட்டும். எனினும் தற்போதைய நிலைமையில் அரசாங்கம், தேர்தலை நடத்தப்போவதில்லை என்றார்.
இதேவேளை, இலங்கையில் அடுத்த வாரத்தில் கறுப்பு டொலர்களை வெள்ளை டொலர்களாக மாற்றும் செயற்பாடு இடம்பெறவுள்ளது. நாட்டில் டொலருக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகவே ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ள என்றார்.
இதேவேளை நனோ நைட்ரிஜன் கொள்வனவின் மூலம் 800 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டம், நாட்டின் வரி செலுத்துவோரின் பணமாகும் என்றார்.