இவரைத் தெரியுமா -பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிசூட்டடில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்கள்
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வசிப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மே 30 அன்று, தேடப்படும் சந்தேக நபர் ஒருவரைப் பிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 071- 8591733, 071- 8591735 அல்லது 071- 8596503 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையால் கோரப்பட்டுள்ளது.

