யாழில் சிறுவனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம்
                                    
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Harrish
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம்(Jaffna) - உடுவில், கற்பமுனை பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(03.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,“ உயிரிழந்த சிறுவனின் தந்தை இன்று(03) மாலை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தினை பின் வளமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, குறித்த சிறுவன் பின்னிருப்பதை கவனிக்காததால் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த நிலையில் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்