பிரிந்த காதலியை சுடச் சென்ற காதலன் : காதலியின் முகத்தை பார்த்ததும் எடுத்த முடிவு
கோவிந்துபுர காவல் பிரிவின் புத்தம ரிதிகஹவத்த பகுதியில் தனது பிரிந்த காதலியை கடந்த (11)ஆம் திகதி காலை சுடச் சென்ற காதலன், அவள் மீது பரிதாபப்பட்டு, அவள் முகத்தைப் பார்த்ததும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டவிட்டு தப்பி ஓடியதாக கோவிந்துபுர காவல்துறையினர் தெரிவித்தனர்.
புத்தம ரிதிகஹவத்தவைச் சேர்ந்த 24 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாகவும், இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும் கோவிந்துபுர காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலையில் பணி
தற்போது மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் குறித்த பெண் பணிபுரிகிறார். அவள் வேறொரு இளைஞனுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கேள்விப்பட்ட அவரது முன்னாள் காதலன், சாலையைக் கடந்து, அவள் வீட்டிலிருந்து ஆடைத் தொழிற்சாலைக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்க வந்து கொண்டிருந்தபோது அவளைச் சுட முயன்றார். எனினும் அவள் முகத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.
கோவிந்துபுர பதில் OIC DM கருணா சாந்த அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
