யாழில் லஞ்சம் வாங்கிய காவல்துறை உத்தியோகத்தரின் மகன்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்
யாழ்ப்பாணம் (Jaffna) தலைமை காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலஞ்சம் பெற்றதாக யாழ். மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறான முறைப்பாடு பதிவு செய்யப்படும் போது அதனை 48 மணி நேரங்களுக்குள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியது காவல்துறையினரின் கடமை என்றும் அதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களது கோரிக்கை
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி இதுவரை இடமாற்றமோ அல்லது எந்த விதமான ஒழுக்காற்று நடவடிக்கைளுக்கோ உட்படுத்தப்படாமல் அதே காவல்துறையித்தில் நிலையத்தில் கடமை புரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினர் இதுவரை குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாது, மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன்படி, இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்