இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sathangani
இரத்மலானையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இரண்டு கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித காயமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி