இராணுவ ஊடகப் பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன நியமனம்
srilanka
director
brigadier nilantha premaratne
appointed
By Vasanth
இராணுவத்தின் 19 ஆவது ஊடகப் பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தனது கடமைகளை இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்திருந்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் எளிமையான முறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இவருக்கு முன்னர் இராணுவத்தின் ஊடகப்பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இராணுவத்தின் புதிய ஊடகப்பணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டுள்ள , பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதற்கு முன்னர் , யாழ் மாவட்டத்திற்கான இராணுவ பாதுகாப்பு படையணியின் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள, 551 ஆவது படையணியின் தளபதியாக கடமைபுரிந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி