காசா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் உடந்தைப்போக்கு! விசாரணை கோரும் ஸ்டார்மர்
இனப்படுகொலையில் பிரித்தானியாவின் உடந்தைப்போக்கு குறித்து ஒரு சுதந்திரமான பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பின்(Jeremy Corbyn) நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று தனது பதவிவை விட்டு விலகிய நிலையில் அவரை சாடிப் பேசிய கார்பின், கீர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகிவிட்டார் - ஆனால் நமது காலத்தின் மிகச் சிறந்த குற்றத்தில் அவரது அரசாங்கம் வகித்த பங்கை நாம் எப்போதும் மறக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் பிரித்தானியாவின் தலையீடு, ஆயுத விநியோகம், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ரோயல் விமானப்படைத் (RAF) தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விசாரணை நடத்தக் கோரி கடந்த ஆண்டே இந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் முதன்முதலில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஸ்டார்மரின் அரசாங்கம்
எனினும், ஸ்டார்மரின் அரசாங்கம் அதன் இரண்டாவது வாசிப்பின் போது இந்த மனுவை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனியர்கள், மருத்துவர்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சாட்சியங்களை உள்ளடக்கிய காசா தொடர்பான இரு நாள் தீர்ப்பாயத்தை ஜெரமி கார்பின் முன்னின்று நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |