உயர்தர பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிலைய மாபியாக்களின் சுய நோக்கத்துக்காக பரீட்சைகளை பிற்போட கூடாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் பரீட்சையை பிற்போடுமாறு முன்வைக்கப்படும் விடயம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய பரீட்சைகள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா பெருந்தொற்று தாக்கத்தைத் தொடர்ந்தே தேசிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன. ஏனைய நாடுகளில் கொரோனா தொற்றை காரணம் காட்டி பரீட்சைகள் பிற்போடப்படவில்லை.
தேசிய பரீட்சைகள் உரிய காலப்பகுதிக்குள் நடத்தாத காரணத்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சையை பிற்போடுமாறு உதய கம்மன்பில போன்றவர்கள் குறிப்பிடுவதை கவனத்திற் கொள்ள கூடாது.
தனியார் கல்வி நிலைய மாபியாக்களின் சுய நோக்கத்துக்காக பரீட்சைகளை பிற்போட கூடாது. உயர்தர பரீட்சையை திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும்.“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |