விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம் - பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்ட அறிவிப்பு
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து குறுகிய தூர விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை ஓகஸ்ட் 8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனாவின் போதான நிறுத்ததிற்கு பின் விமான நிலையங்களில் ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாட்டால் பயணிகளை கையாள்வது, பொருள்களை கையாள்வது, அதிகப்படியான செக்-இன்களை சமாளிப்பது போன்றவை அதிக சிரமங்களுக்குள் உள்ளாகின.
இந்த நிலையில் பிரித்தானியா விமான நிலையத்தின் திறனைக் கட்டுப்படுத்தவும், பரவலான இடையூறுகள் மற்றும் விமான ரத்துச் செயல்களை சமாளிக்கவும் ஹீத்ரோவிலிருந்து பறக்கும் குறுகிய தூர விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை ஓகஸ்ட் 8ம்அ திகதி வரை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய இடங்களுக்கான விற்பனை இடைநிறுத்தம் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் தேவைப்படும் போது விமானங்களை மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தைப் போலவே, ஹீத்ரோ விமான நிலையமும் வரிசைகள், பொருட்கள், தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, மையத்திலிருந்து ஒரு நாளைக்கு 100,000 பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திய பிறகு, கோடையிலும் டிக்கெட் விற்கும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு அதன் விமான நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது.
