தென்னிலங்கையில் பிரித்தானிய பிரஜை மர்ம மரணம்
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Vanan
பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்பு
இலங்கையின் தென் பகுதியில் வீடொன்றில் வசித்துவந்த பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 55 வயதுடைய நபரே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தனியாக வீட்டில் வசித்துவந்த நிலையில், உயிரிழந்துள்ள பிரித்தானிய பிரஜை, தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
வீட்டின் உரிமையாளர் நேற்று சனிக்கிழமை இரவு உணவு கொண்டு சென்ற போது, குறித்த பிரித்தானிய பிரஜை கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வெளிநாட்டவரின் பிரேத பரிசோதனை காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், ஹபராதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
1ம் ஆண்டு நினைவஞ்சலி