யாழ். நல்லூர் ஆலய பின் வீதியில் விபச்சார விடுதி: அதிர வைக்கும் தகவல்
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் தனியார் வீடு ஒன்று விபச்சார விடுதியாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக் காலங்களாக தமிழர் பகுதிகளில் முகம் சுழிக்க வைக்கும் சில செயற்பாடுகள் இடம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் தமிழ் மக்களின் புனித தலமாக பார்க்கப்படும் யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சுற்றி இடம்பெற்ற சில செயற்பாடுகள் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
யாழ் மாநகரசபை
இந்த நிலையில் நல்லூர் ஆலய பின் வீதியில் வீடு ஒன்றில் விபச்சார விடுதி ஒன்று செயற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிலர் அந்த வீட்டை தற்போது பொறுப்பெடுத்து அதனை விடுதியாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் அந்த வீட்டில் பெண்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நல்லூர் கந்தன் ஆலய புனித பூமியில் யாழ் மாநகரசபை இந்த விடுதியை இயங்குவதற்கு எவ்வாறு அனுமதி கொடுத்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அசைவ உணவகம்
இதேவேளை அண்மையில் யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அசைவ உணவகம் ஒன்றும் திறக்கப்பட்டிருந்தது.
பின்னர் போராட்டங்கள், மனு கையளிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த அசைவ உணவகம் சைவ உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த அசைவ உணவகத்துக்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள் மற்றும் நபர்கள் இந்த விபச்சார விடுதி தொடர்பில் மௌனம் காப்பது ஏன்?
மேலும் உரிய அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
