கதையை முடிக்க ட்ரம்ப் எடுக்கும் ஆயுதம்: கேள்விக்குறியாகியுள்ள ஈரானின் நிலை
ஈரானின் (Iran) அணுசக்தி கட்டமைப்பை முழுவதுமாக அழிக்க அமெரிக்கா (United States) பங்கர் பஸ்டர்கள் (Bunker Busters)எனும் ஏவுகணையை பயன்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்தும் மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் (Israel) இடையில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.
இராணுவத் தாக்குதல்
அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது வருகிறது ஈரான்.
இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்பை முழுவதுமாக அழிக்க அமெரிக்கா பங்கர் பஸ்டர்கள் பயன்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்கர் பஸ்டர்கள் என்பது, மலைக்களுக்குள் இருக்கும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்பை முழுவதுமாக அழிக்க அமெரிக்கா தயார் செய்து வைத்திருக்கும் ஆயுதம் தான் அது.
பங்கர் பஸ்டர்கள்
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டும் எனில், GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனும் குண்டுதான் இந்த வேலையை சரியாக செய்யும்.
நிலத்திற்கு அடியில் இருக்கும் பதுங்கு குழிகளை அழிப்பதற்கு என்றே தனியாக உருவாக்கப்பட்ட குண்டுகள்தான் இது.
இந்த குண்டை எல்லா விமானங்களிலும் பயன்படுத்த முடியாது. இதற்காக தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட B-2 Spirit stealth bombers விமானங்களால் மட்டுமே குண்டை போட முடியும்.
இந்த விமானம், ரேடார் கண்களில் மண்ணை தூவி, எதிரி நாட்டுக்குள் நுழைந்து குண்டு வீசிவிட்டு பத்திரமாக திரும்பும். GBU-57 குண்டுகள் GPS உதவியுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும். சுமார் 2 டன் TNT வெடிபொருள் எந்த அளவுக்கு பாதிப்பை வெளியிடுமோ, அந்த அளவுக்கு இந்த குண்டு வீரியமானது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
