இந்தியாவை உலுக்கிய கோர விபத்து! குழந்தை உட்பட 11 பேர் பலி
India
Accident
By pavan
இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேருந்துப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பயணிகள் பேருந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதிய நிலையில் பேருந்து தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை உட்பட மரணம்
இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண மானவர்களில் ஒரு அகவை குழந்தையும் அடங்கியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் இதில் சிலரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்