களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Srilanka Bus
By Sathangani Oct 09, 2024 10:56 AM GMT
Report
புதிய இணைப்பு

களுவாஞ்சிக்குடியில் (Kaluwanchikudy) தனியார் பேருந்தில் பணத்தை திருடியதாக நடத்துநர் ஒருவரை தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் உரிமையாளர் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (08) பிறப்பித்துள்ளார்.

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துநரான இளைஞன் கல்முனையைச் சோந்த தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரின் கல்முனை கதுருவெல பிரதேசத்துக்கான பிரயாணிகள் சேவை நடத்துநராக கடமையாற்றி வந்துள்ளார்.

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜனநாயக இடதுசாரி முன்னணி

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜனநாயக இடதுசாரி முன்னணி

கட்டிவைத்து சித்திரவதை

இதன்போது களுவாஞ்சிக்குடி மகிளுரைச் சேர்ந்த உரிமையாளரது பேருந்து கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில் இரு வண்டிகளின் நேர அட்டவணையில் நிமிட கணக்கான வித்தியாசத்தினால் பிரயாணிகளை ஏற்றுவதில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது.

களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Bus Conductor Was Tied To A Coconut Tree And Beat

இந்த நிலையில் 5ம் திகதி சனிக்கிழமை கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்து சாரதியுடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான நடத்துநர் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திய நிலையில் அவருக்கு மதுபோதை அதிகரித்த நிலையில் அவரது கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது.

காணாமல் போன கையடக்க தொலைபேசி தொடர்பாக களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ள அவர், சம்பவதினமான ஏழாம் திகதி கையடக்க தொலைபேசியைத் தேடி மீண்டும் களுவாஞ்சிக்குடிக்கு சென்று குறித்த பேருந்தில் தேடிய நிலையில் அவரை பேருந்து உரிமையாளர் மற்றும் சாரதி பேருந்தில் திருடியதாக பொய்யாக தெரிவித்து பாழடைந்த காணிக்குள் இழுத்துச் சென்று தென்னைமரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : முன்னாள் போராளி காட்டம்

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : முன்னாள் போராளி காட்டம்

நீதவான் உத்தரவு

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடத்துநர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து திருட்டில் ஈடுபட்டதால் பிடித்து தாக்கியதாக கூறப்பட்டமை உண்மைக்கு புறம்பானது என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Bus Conductor Was Tied To A Coconut Tree And Beat

அதேவேளை பாதிக்கப்படவரின் உறவினர்கள் மனித உரிமை ஆணையகத்தில் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து காவல்துறையினர் நடந்த உண்மையை விளங்கி கொண்டு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இந்நிலையில், இருவரையும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர அரசு எடுத்துள்ள முடிவு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர அரசு எடுத்துள்ள முடிவு

முதலாம் இணைப்பு

களுவாஞ்சிக்குடியில் (Kaluwanchikudy) தனியார் பேருந்தில் பணத்தை திருடியதாக நடத்துநர் ஒருவரை தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (7) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரது கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தின் உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

பெண் வேட்பாளர் தெரிவில் சுமந்திரனின் சதி அம்பலம்....!

பெண் வேட்பாளர் தெரிவில் சுமந்திரனின் சதி அம்பலம்....!

காவல்துறையினருக்கு தெரிவிப்பு 

அந்த தனியார் பேருந்தில் ஏற்கனவே கடமையாற்றிய அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துநரான இளைஞனே குறித்த பணத்தினை திருடியுள்ளதாக சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Bus Conductor Was Tied To A Coconut Tree And Beat

இதனையடுத்து குறித்த இளைஞன் நேற்று களுவாஞ்சிக்குடியிலுள்ள சாரதி ஒருவரின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு சென்ற தனியார் பேருந்தின் உரிமையாளர் இளைஞனைப் பிடித்துக்கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பின்னர் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியில் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கும் அணி எம்மிடம்..! சவால் விடும் சஜித்

நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கும் அணி எம்மிடம்..! சவால் விடும் சஜித்

நீதிமன்றில் முன்னிலை

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு யாரும் இல்லாததையடுத்து திரும்பிச் சென்று இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Bus Conductor Was Tied To A Coconut Tree And Beat

இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த காணொளிக் காட்சி ஊடகங்களில் வெளியானதையடுத்து காவல்துறையினர் தாக்குதல் நடாத்திய பேருந்து உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தாக்குதலுடன் சம்பந்தப்பட சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கோண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வற் வரியை செலுத்தத் தவறிய பணிப்பாளர்கள்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

வற் வரியை செலுத்தத் தவறிய பணிப்பாளர்கள்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், கொழும்பு, London, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, உடுவில், வவுனியா

04 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016