தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து!
கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்துப் பேருந்தில் இன்று (19-07-2026) மாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இயந்திர கோளாறு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகக் காலி நோக்கிப் பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடமாற்றல் பகுதியில் வெளியேற்றி, சாதாரண வீதியூடாகப் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 23 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்