கட்டுநாயக்கவில் தரையிறங்கிய தொழிலதிபர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Customs
By Sumithiran
சுமார் ரூ.20 மில்லியன் மதிப்புள்ள நவீன கைபேசிகள் மற்றும் ஏலக்காய்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள கிரீன் மாவத்தை வழியாக பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கொண்டுவரப்பட்ட கைபேசிகள் மற்றும் ஏலக்காய்
அவரது 06 பொதிகளில் 165 சட்டவிரோத கைபேசிகள் மற்றும் 102 கிலோகிராம் ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகத்திற்குரிய விமானப் பயணி கொழும்பு பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி