தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம்
தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த வழக்கை பிரதி காவல்துறைமா அதிபர் பிரசாத் ரணசிங்க மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும், இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே என்றும் கூறப்படுகிறது.
தினேஷ் ஷாப்டரின் கொலை
இந்நிலையில் தற்போது தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை காவல்துறையை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்றும், இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கைத தடுத்த ராஜபக்சர்கள்
“அன்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.
அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |