பிரித்தானியாவில் வரலாறு கண்டிராத உலுக்கம் : ஜோன்சன் தரப்புக்கு பலத்த அடி
புதிய தேர்தல் தோல்வி
பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் அவரது கென்சர்வேடிவ் கட்சிக்கு புதிய தேர்தல் தோல்வியும் உட்கட்சி உலுக்கமும் கிட்டியுள்ளது.
நேற்று நடந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்காக இடைத்தேர்தல்களில் கென்சவேட்டிவ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் இணைத்தலைவர் ஒலிவர் டவுடன் (Oliver Dowden) இன்று அதிகாலை பதவி விலகியுள்ளார்.
பிரித்தானிய மக்களிடமும் தனது சொந்தக்கட்சியிலும் செல்வாக்கை இழந்துவரும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு நேற்று நடந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் புதிய பின்னடைவை வழங்கியுள்ளன.
இரண்டு தொகுதிகளிலும் கென்சவேட்டிவ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து கட்சியின் இணைத்தலைவரான ஒலிவர் டவுடன் இன்று அதிகாலை பதவி விலகியுள்ளார்.
நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய இடைத்தேர்தல் வெற்றி
கட்சியில் ஏற்பட்ட அண்மைய நிகழ்வுகளால் கட்சியின் ஆதரவாளர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நிலைமைக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதனையடுத்து பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் பதவியில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் கென்சவேட்டிக்கட்சியில் மீண்டும் வலுப்பட்டு வருகின்றன.
ஆயினும் தற்போது பொதுநலவாய மாநாட்டுக்காக ருவான்டாவில் தங்கியுள்ள ஜோன்சன் மீண்டும் ஒரு முறை இந்தப் பதவிவிலகல் கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
நேற்று நடந்த இந்த இடைத்தேர்தல்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தனது வசம் இருந்த தொகுதியைம் கென்சவேட்டிவ் கட்சி இழந்திருக்கிறது.
இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தொழிற்கட்சியும் மற்றைய தொகுதியில் லிப்டெம் எனப்படும் தாரளவாத ஜனநாயக கட்சியும் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து நாடு, இதுவரை கண்டிராத மிகப்பெரிய இடைத்தேர்தல் வெற்றி தமக்கு கிட்டியுள்ளதாக லிப்டெம் தலைவர் எட் டேவி குறிப்பிட்டுள்ளார்.