ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு!
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிக்க செனட்டராக கருதப்படும் ஆடம் ஷிஃப், ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தப் போரின் ஆறு மாத நிறைவைக் குறிக்கும் வகையில் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீடித்த இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரித்துள்ளார்.
“ஆறு மாதங்களாக எந்தவொரு திட்டமிட்ட உத்தியும் இல்லை, போரின் முடிவும் தெரியவில்லை; அனைத்துத் துறைகளிலும் செலவுகள் அதிகரித்துள்ளன; நமது படைவீரர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.'
போரின் விளைவுகள்
போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த அவர், “நமது படைவீரர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் அழைத்து வாருங்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Today marks six months of the Iran War.
— Senator Adam Schiff (@SenAdamSchiff) August 28, 2026
Six months with no strategy and no end in sight.
Six months of higher costs across the board.
Six months of our servicemembers being away from their families.
Six months and 18 service members killed.
We must end this war and bring our… https://t.co/pZDbQlBBUj pic.twitter.com/ou7NWywawx
அமெரிக்கா வரும் நவம்பரில் இடைக்காலத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், இந்தப் போரின் விளைவுகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |