கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு
கியூபெக் மாகாணத்திற்கு வெளியே 5,000 கூடுதல் நிரந்தர வதிவிட (PR) இடங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் (Lena Metlege Diab) தெரிவித்துள்ளார்.
புதிய வேலைவாய்ப்பு
கனடாவின் பன்முகத்தன்மை மற்றும் மொழி வளத்தைப் பேணுவதற்கு இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.

மொத்த நிரந்தர வதிவிடச் சேர்க்கையில் சுமார் 8.9 சதவீதம் பிரெஞ்சு மொழி பேசுபவர்களால் நிரப்பப்பட்டுள்ளது.
இது பிரெஞ்சு மொழி பேசும் திறமையாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும், நிரந்தரக் குடியுரிமைக்கான எளிய வழிகளையும் உருவாக்கும் என குடிவரவு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பல்வேறு மொழி பேசும் சமூகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் கனடாவின் பொருளாதார மற்றும் கலாசாரக் கட்டமைப்பை இது மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான இலக்குகளை கனடா பின்வருமாறு உயர்த்தியுள்ளது.

2026: 9 சதவீதம் 2027: 9.5 சதவீதம் 2028: 10.5 சதவீதம் 2029-க்குள்: 12 சதவீதம் (இலக்கு) இந்த இலக்குகளை அடைவதற்காக கனடா அரசாங்கம் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry): பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களுக்கென பிரத்யேகப் பிரிவு. பிராங்கோபோன் மொபிலிட்டி (Francophone Mobility): எளிதான வேலை அனுமதி வழங்கும் திட்டம்.
மாணவர் முன்னோடித் திட்டம் (Student Pilot): சிறுபான்மை பிரெஞ்சு சமூகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சிறப்புப் பாதை.
வரவேற்பு சமூகங்கள் (Welcoming Communities): புதிய குடியேறிகளை வரவேற்று ஒருங்கிணைக்கும் உள்ளூர் முயற்சிகள் என்பன அடங்கும். கனடாவின் இந்த அறிவிப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |