இலங்கைக்கான பயண ஆலோசனையை இலகுபடுத்திய கனடா
பயண ஆலோசனையில் தளர்வு
இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்தியுள்ளததாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதனை தற்போது தளர்த்தி அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா தெரிவித்துள்ளது.
இவ்வாறு பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளதுடன், இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கும் குறைத்துள்ளது.
மஞ்சள் பட்டியலில் இலங்கை
இலங்கையில் எரிபொருள், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன் காரணமாக இலங்கை மஞ்சள் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.