புடினுக்கு இறுக்கம்!! தொடரும் பழிவாங்கும் படலம்
ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினையும், அந்நாட்டு இராணுவத்தினர் 1000 பேரையும் தங்கள் நாட்டுக்குள் நுழைய கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்தன.
எனினும், அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், கனடா நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் அவரின் அரசாங்கம், இராணுவத்தில் இருக்கும் ஆயிரம் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான முடிவும் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான மார்க்கோ மென்டிசினோ தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் நெருக்கமான பங்காளிகளும், முக்கிய ஆதரவாளர்களும் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பது, ரஷ்ய நாட்டை அதன் குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்க செய்யும் பல்வேறு வழிகளில் ஒன்று எனக் கூறியியுள்ளார்.