கனடாவின் புதிய புலம்பெயர்தல் திட்டம் - மில்லியன் கணக்கானோருக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்
கனடா, 2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்காக தனது புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டளவில், மொத்தமாக 1.5 மில்லியன் புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.
பணியாளர் தட்டுப்பாடு
கனடாவில் கடுமையான பணியாளர் தட்டுப்பாடு நிலவுவரும் நிலையில், பணி வழங்கும் பலர் புலம்பெயர்ந்தோர் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
சுகாதாரம், திறன்மிகு வர்த்தகம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை, புலம்பெயர்வோரைக் கொண்டு சந்திக்கும் வகையில் புதிய புலம்பெயர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்தல் திட்டம்
அத்திட்டத்தின்படி, வரும் மூன்று ஆண்டுகளில் கீழ்க்கண்ட எண்ணிக்கையிலான புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டில் 465,000 பேரும், 2024ஆம் ஆண்டில் 485,000 பேரும், 2025ஆம் ஆண்டில் 500,000 பேரும் கனடாவுக்கு வரவேற்கப்பட உள்ளார்கள்.
தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.