யாழில் கனடாவை சேர்ந்த புலம்பெயர் நபர்கள் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் கனடா (Canada) சேர்ந்த புலம்பெயர் நபர் மற்றும் அவரது மகன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காவல்நிலையத்தில் முறைப்பாடு
குறித்த நபர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்ற நபர், அவரின் சொத்தினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், சுன்னாகத்தை சேர்ந்த அண்ணா முறையான நபரின் மகளின் கணவனுக்கும் கனடாவைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் சுன்னாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
மேலும், இரு தரப்பினரையும் விசாரணைக்குட்படுத்தி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை கனடாவை சேர்ந்த நபரையும் அவரது மகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 5 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)