ட்ரம்பின் அதிரடி தீர்மானங்கள்: கனேடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள பாரிய தாக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஏற்படுத்திய வரி மோதல் மற்றும் அவரது மிரட்டல் கருத்துகள் காரணமாக, அமெரிக்காவுக்கு செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை கனேடிய (Canada) புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்காவிலிருந்து காரில் வீடு திரும்பிய கனேடியர்கள் முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 32% குறைந்துள்ளனர்.
பாரிய சரிவு
இது பெருந்தொற்று காலத்திற்குப் பின் முதல் மிகப்பெரிய சரிவாக பதிவாகியுள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், விமானத்தில் திரும்பியவர்களின் எண்ணிக்கையும் 13.5 வீதமாக குறைந்துள்ளது.
ட்ரம்ப் மேற்கொண்ட தாக்குதலான வரி தீர்மானங்கள், மற்றும் "கனடா ஒரு அமெரிக்க மாநிலமாக மாறும்" என கூறியமை, கனேடியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்தச் சறுக்கல் கனேடியர்களின் தற்போதைய உணர்வுகளை பிரதிபலிக்கிறது பயண நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கனேடியர்கள் அதிருப்தி
அமெரிக்காவில் கனேடியர்கள் சிலர் எதிர்நோக்கிய கசப்பான அனுபவங்களும் இந்த அதிருப்தி நிலைமைக்கு ஏதுவாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கும் கனேடியர்களுக்கு புதிய பதிவு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, கனேடிய டொலரின் பெறுமதி தற்போது அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது 70 சதவிகிதம் மட்டுமே என்பதால் என சிலர் பொருட்கள் வாங்க அமெரிக்காவுக்குச் செல்லும் எண்ணத்தை தவிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
