அரசுக்கெதிரான போராட்டங்களை அவசரகால பிரகடனத்தின் மூலம் அடக்க முடியாது - சுமந்திரன்
அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் அவசரகால பிரகடனத்தின் மூலம் அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவசரகால பிரகடனத்தை அரச தலைவர் உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று முதல் நடைமுறையாகும் வகையில் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டதாவது,
"அவசரகால பிரகடனத்தை அரச தலைவர் உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்
— M A Sumanthiran (@MASumanthiran) April 1, 2022
