எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனுக்கு பிணை!
colombo
court
ship
By Shalini
MV எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனான ரஷ்ய நாட்டவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கெப்டன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றினால் பயணத் தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.
கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் இன்று பிற்பகல் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி