தனது குழந்தையின் பால் தான நிகழ்விற்கு சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்
தனது குழந்தையின் பால் தானத்துக்காக சென்ற இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து ஹொரனை கோனாபொல கும்புக பிரதேசத்தில் இடம்பற்றுள்ளது.
பாதுகாப்பற்ற வீதித் தடையில் மகிழுந்து மோதியதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சி விஞ்ஞானி
இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில்,
''தனது குழந்தையின் பால் தானத்துக்காக பூக்களுடன் சொகுசுக் மகிழுந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் கோனாபொல கும்புக கிழக்கில் வசிக்கும் 37 வயதுடைய நனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் இன்று காலை தனது மூன்று மாத குழந்தைக்கான பால் தானத்திற்கான பூக்களை எடுத்து வருவதற்காக பிலியந்தலை பகுதிக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது வீதித் தடுப்பில் மகிழுந்து மோதியதில் குறித்த விபத்தை சந்தித்துள்ளார்.
பிளாஸ்டிக் துண்டு கழுத்தை வெட்டியதில்
விபத்தின் பின்னர் மகிழுந்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு காற்று பலூன்கள் இயக்கப்பட்டு சுமார் 100 மீற்றர் முன்னோக்கி இழுத்து சென்று வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காற்று பலூன் இயக்கப்பட்டவுடன், அதிலிருந்து வீசப்பட்ட பிளாஸ்டிக் துண்டு அவரது கழுத்தை வெட்டியதில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.''என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
