முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல்
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்த் கப்ராலுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தாக்கல் செய்துள்ளது.
கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததை அறிந்தவாறே, 2012-ஆம் ஆண்டில் கிரேக்கப் பத்திரங்களை வாங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 184 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னர் மூன்று மாதங்களுக்குள் ரூ. 100 மில்லியனை வைப்பு செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட, நிபந்தனையை மீறியதற்காக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 (5)-ன் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிவர்த்தனை விசாரணை
அஜித் நிவர்ட் கப்ராலுடன் கூடுதலாக, இந்த பரிவர்த்தனை தொடர்பாக மேலும் ஐந்து நபர்கள் மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.

இதில் கே.ஜி.டி. தர்மசேன தீரசிங்க, வசந்த ஆனந்த சில்வா, தண்டுசிறி ஜெயசிங்க, பண்டித சிறிவர்தன மற்றும் எச்.ஏ. கருணாரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளன.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், பிரதிவாதிகள் மூன்று மாதங்களுக்குள் ரூ. 100 மில்லியனை வைப்பு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 (3)-இன் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
வழக்கின் சட்டப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, ஆரம்பக் கட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் சட்டப்பூர்வ செல்லுபடித்தன்மையை எதிர்த்து, பாதுகாப்பு சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பினர்.
மேல் நீதிமன்ற நீதிபதி
இந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெண்டிகே, 2024 மே 31 அன்று அனைத்து பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகைகளை வழங்காமலேயே அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.
மனம் தளராமல், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2024 ஒகஸ்ட் 21 அன்று அதே குற்றச்சாட்டுகளின் பேரில் பிரதிவாதிகளுக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தது.
இரண்டாவது முறையாக மாற்றப்பட்ட வழக்கைத் தொடர முடியாது என்று பாதுகாப்பு சட்டத்தரணிகள் மீண்டும் ஒரு ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை எழுப்பிய போதிலும், இம்முறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்த ஆட்சேபனையை நிராகரித்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு அந்தச் சூழ்நிலையில், மேற்கூறிய ரூ. 10 கோடியை வைப்புச் செய்யும் நிபந்தனைக்கு உட்பட்டு, வழக்கை மீள பெற இலஞ்ச ஊழல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய தொகையை வைப்புச் செய்து நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதால், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக மட்டும் மேல் நீதிமன்றத்தின் ஊடாக மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |