சூதாட்ட விடுதி முற்றுகை – 15 பேர் கைது
Sri Lanka
By pavan
அங்கொட தெல்கஹாவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியில் 100,000 ரூபா பணத்துடன் 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெல்கஹாவத்தையில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் உள்ள குறித்த பெண் பல வருடங்களாக இந்த சூதாட்ட விடுதியை முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முல்லேரியா காவல் நிலையத்தைச் சேர்ந்த நால்வர் மாறுவேடத்தில் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி 20 பேர் கொண்ட காவல்துறை குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றி வளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி