தலிபான்களின் வெற்றியைக் கண்டு அதிர்ந்துபோன இந்தியா! தயார் நிலையில் முப்படைகளின் தளபதி
ஆப்கானிஸ்தானில் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் பக்கத்து நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவ விட மாட்டோம் என்று இந்தியாவின் முப்படை தளபதி விபின்ராவத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தது. அதற்கு 2 மாதங்கள் ஆகும் என்று கருதியது.
ஆனால் குறுகிய காலத்துக்குள்ளேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது ஆச்சரியம் அளித்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் எப்படி இருந்தார்களோ அதேபோன்று தான் இப்போதும் இருக்கிறார்கள்.
அவர்களின் கூட்டாளிகள் மாறி இருக்கிறார்கள். ஆனால் தலிபான்களிடம் மாற்றம் ஏற்படவில்லை.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து இந்தியாவுக்குள் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக்கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
தெற்காசியாவில் பயங்கரவாதம் இல்லாத சூழல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
பயங்கரவாதத்துக்கான யுத்தத்தில் குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம் இருந்து உதவி கிடைத்தால் வரவேற்கப்படும்” என அவர் கூறினார்.