ஆறு மாதத்திற்குள் 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி
CEB
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
6 மாத காலத்திற்கு 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (17) அனுமதி வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 3 முக்கிய நிபந்தனைகளின் கீழ் 2023 ஆகஸ்ட் 18 முதல் 6 மாத காலத்திற்கு மின்சாரம் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்

- தொடர்புடைய மின் கொள்முதல் தகுதியின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் மற்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை செய்யப்பட வேண்டும்.
- கொத்மலை பொல்பிட்டிய 220 kv பாதையானது 2024 ஒகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் செயற்படுத்தப்பட வேண்டும்.
-
இந்த மின்சார கொள்முதல் குறைந்தபட்ச செலவின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி