ஈரான் மீதான அமெரிக்க முற்றுகை தீவிரம்: 20 நாட்களில் திசைதிருப்பப்பட்ட 48 வணிகக் கப்பல்கள்
ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, கடந்த 20 நாட்களில் மட்டும் 48 வணிகக் கப்பல்கள் திசைதிருப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக 44 கப்பல்கள் திசைதிருப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முற்றுகை விதி
தற்போது அந்த எண்ணிக்கை மேலும் நான்கால் அதிகரித்து 48 ஆக உயர்ந்துள்ளது.

முற்றுகை விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும் ஈரானுக்கான விநியோகச் சங்கிலியை முடக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சென்காம் (CENTCOM) விளக்கியுள்ளது.
தொடர் நடவடிக்கை
கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போரினால் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 13 முதல் ஈரான் செல்லும் கடல்வழிப் பாதைகளை இலக்கு வைத்து அமெரிக்கா இந்தக் கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்தி வருகிறது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த முற்றுகை தொடங்கப்பட்டது.
இந்த விவகாரம் இராஜதந்திர ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் ஈரானின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |