சஹ்ரானின் திட்டத்தை அம்பலப்படுத்திய இஸ்லாமிய நபருக்கு நேர்ந்த கதி
சஹ்ரானின் சகாக்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்த இஸ்லாமிய நபர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் திசாநாயக்க கருடத்தொன்றை முன்வைத்துள்ளார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சதியை சிங்கள அடிப்படைவாதிகளே செய்திருக்கிறார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியக்கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்
''ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்டதாவே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அதனை சிங்கள் அடிப்படைவாதிகளே செய்திருக்கிறார்கள் எனதெரியக்கிடைக்கிறது.

ஏனெனில் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இரண்டுபேருமே ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு 300 பேரை கொலை செய்திருக்கிறார்கள்.
அப்படியானால் மரணித்த பிள்ளைகள் இருவர்களால் இப்ராஹிமுக்கு பிரச்சினை இல்லை. சம்பவத்துடன் தொடர்புடைய வேறு யாருக்கும் பிரச்சினை இல்லை.
ஜனாதிபதி கைச்சாத்திட்டால், அவர்கள் இருவரையும் தூக்கிலிட முடியும். ஆனால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர் இன்று அரசாங்கத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருக்கிறார்.
கரம்போடுக்கு பிரேரணை
அதேபோன்று இந்த சம்பத்துடன் சம்பந்தப்படும் ஷானி அபேசேகர இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர். ரவி செனவிரத்ன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கிறார்.

அதனால் உள்ளே இருக்கவேண்டியவர்கள் வெளியில் இருக்கிறார்கள். வெளியில் இருக்கவேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள். கரம்போடுக்கு பிரேரணை கொண்டுவந்தவர் இன்று அமெரிக்காவில் இருக்கிறார். கரம்போட் பகிர்ந்தவர் சிறையில் இருக்கிறார்.
அதேபோன்று சஹ்ரானின் ஆட்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்தது, முஸ்லிம் நபர் ஒருவர். ஆனால் அந்த நபருக்கு சஹ்ரானின் குழு துப்பாக்கி பிரயோகம் செய்ததில், அவர் இன்று சுயமாக இயங்க முடியாமல் இருக்கிறார்.
ஆனால் அவருக்கு எந்த நட்டஈடும் வழங்கப்படவில்லை. அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை. என்றாலும் இப்ராஹிமுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |