உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

Easter Attack Sri Lanka Pujith Jayasundara Hemasiri Fernando
By Dharu Jul 31, 2026 12:00 PM GMT
Report

போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு இரு பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்திருந்தது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று

மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம்

எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுதலைத் தீர்ப்பை இரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளை மீண்டும் பதிவு செய்து வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை | Death Sentence For Pujith Jayasundara

அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு இழப்பீட்டு வழக்கு! பூஜித் ஜயசுந்தர - நிலந்தவுக்கு நீதிமன்றின் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு இழப்பீட்டு வழக்கு! பூஜித் ஜயசுந்தர - நிலந்தவுக்கு நீதிமன்றின் உத்தரவு

பெரும்பான்மைத் தீர்ப்பை வாசித்த மூவரடங்கிய நீதிமன்றத் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே (சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 நிறுபிக்கப்பட்டது), 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகத் தெளிவான புலனாய்வுத் தகவலை முன்னாள் காவல்துறைமா அதிபருக்கு வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

அவ்வாறான எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் காவல்துறைமா அதிபராக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அந்தக் கடமையின்மை காரணமாக 268 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 586 பேர் காயமடைந்தனர் என்றும், குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதிபதிகள் அறிவித்தனர்.

இதற்கிடையில், சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி விராஜ் வீரசூரிய(855 குற்றச்சாட்டுகளில் ஒன்று மாத்திரம்) , பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அவரை குற்றமற்றவர் என விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை, இதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த தீர்ப்பு வாசிப்பின் முடிவில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது : பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது : பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

ஹேமசிறி, பூஜித் வழக்கு : பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

ஹேமசிறி, பூஜித் வழக்கு : பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் - 75 மில்லியன் செலுத்திய பூஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் - 75 மில்லியன் செலுத்திய பூஜித்

தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் அதிகாரிகள்! மேல் நீதிமன்றின் உத்தரவு

தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் அதிகாரிகள்! மேல் நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016