நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழை சேர்ந்த பெண் நியமனம்
Government Employee
Government Of Sri Lanka
Ministry of justice Sri lanka
By Thulsi
நீதி அமைச்சின் (Ministry of Justice and National Integration) மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் - உரும்பிராயைச் சேர்ந்த மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை நிர்வாக சேவை அதி சிறப்பு தரத்தை மதுமதி பூர்த்தி செய்த நிலையில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி உயர்வுடன் இடமாற்றம்
இவர் உடுவில் பிரதேச செயலாளர், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என பல பதவிகளை வகித்த நிலையில் இறுதியாக வடமாகாண தபால் மா அதிபராக கடமை வகித்தார்.
இந்நிலையில் தற்போது நீதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலர் உட்பட சில பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்