யாழ்.மாவட்ட உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு
யாழ்ப்பாண மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலர் உட்பட சில பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் மேலதிக மாவட்ட செயலர் (காணி), கோப்பாய், பருத்தித்துறை, நெடுந்தீவு மற்றும் வேலணை ஆகியவற்றின் பிரதேச செயலர்களுமே இவ்வாறு இடமாற்றமும் பதவி உயர்வும் பெறவுள்ளனர்.
அதன்படி யாழ்ப்பாணம் மேலதிக மாவட்ட செயலராகக் (காணி) கடமையாற்றிய ஸ்ரீமோகனன் மின்மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.
அஞ்சல் திணைக்களம்
கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறீ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் வடக்கு மாகாண சபைக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச செயலாளராக பணியாற்றிய நிவேதிகா அஞ்சல் திணைக்களத்துக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளதுடன் வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் மேலதிக மாவட்ட செயலாளராகப் (நிர்வாகம்) பதவி உயர்வு பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், பருத்தித்துறை பிரதேச செயலகங்களுக்குப் புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
