செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடி! அவசரப் பேச்சுவார்த்தை நடத்த 22 EU தலைவர்கள் அழைப்பு
ஸ்பெயினின் சுயாட்சி பிராந்தியமான சியூட்டா (Ceuta) பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் நுழைந்ததைத் தொடர்ந்து, நிலைமையை விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய (EU) உள்துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை நடத்துமாறு 22 உறுப்புநாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் முன்முயற்சியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், இந்த விவகாரம் மிகுந்த அவசரத்திற்குரியது என்பதால், உள்துறை அமைச்சர்களின் விசேட காணொளி மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மொரோக்கோவிலிருந்து சுமார் 50,000 குடியேற்றவாசிகள் சியூட்டாவுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோவுக்கு திருப்பி அனுப்பல்
இவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் மொரோக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்திருந்தாலும், தற்போதைய நிலைமை குறித்து 22 நாடுகளின் தலைவர்கள் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சி தலைமைப் பொறுப்பை வகிக்கும் அயர்லாந்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய நீதி மற்றும் உள்துறை அமைச்சர்களின் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
அயர்லாந்து பிரதமர் மைகேல் மார்ட்டின், சமூக வலைத்தளமான X-இல் வெளியிட்ட பதிவில், சியூட்டா நிலைமையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன், இந்த நடவடிக்கையை வரவேற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறனை மேம்படுத்தும் பாடங்களைப் பெறுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பெருமளவிலான குடியேற்ற அலைக்குப் பிறகும், ஒருவர்கூட ஸ்பெயின் பிரதான நிலப்பரப்பிற்கோ அல்லது பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கோ செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
எனினும், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், போர்த்துகல் பிரதமர் லூயிஸ் மொன்டேநெக்ரோ, மற்றும் லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃப்ரீடன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை என தெரிவிக்கப்படவுள்ளது.
இதன்படி சியூட்டா நிலைமையைப் பற்றிய பொதுவான மதிப்பீட்டை உருவாக்கி, ஒருங்கிணைந்த ஐரோப்பிய பதிலடி நடவடிக்கையில் உடன்பாட்டை எட்டுவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று 22 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |