அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு விடுக்கப்பட்ட சவால்
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க பொலிஸாரை பயன்படுத்த முயற்சிக்காமல் எந்த தொலைக்காட்சி அலைவரிசையிலும் பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோ நேற்று (ஜன. 06)நாடாளுமன்றில் சவால் விடுத்தார்.
"இங்கு திரு. வீரசேகர இருக்கிறார். நான் மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்த்தேன். இப்போது உங்களை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “நான் அலைகளுக்கு பயந்தால் கடற்கரைக்கு வர வேண்டாம் என்று திரு. ஹரின் பெர்னாண்டோ சொன்னபோது, நான் அவரை நேரடியாக சிஐடிக்கு விசாரணைக்காக செல்லுமாறு சொன்னேன், நான் அவரை நவலோகாவில் அனுமதிப்பேன். நீங்கள் விவாதத்திற்கு செல்ல முதல் சிஐடி அதிகாரிகளுடன் செல்லுங்கள். நீங்கள் என்னுடன் வர வேண்டியதில்லை, ஏனென்றால் இது அரசியல் விவகாரம் அல்ல. "எனத் தெரிவித்தார்.
பதிலளித்த ஹரின், "சிஐடி அதிகாரிகளை நேரடி கலந்துரையாடலுக்கு அழைத்து வாருங்கள், நான் தயாராக இருக்கிறேன். நேரடி உரையாடலுக்கு வாருங்கள்!"என அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஹரின் பெர்னாண்டோ மீண்டும் சவால் விடுத்தார்.