கோழி இறைச்சிக்கு வர்த்தமானி வெளியிட வேண்டி ஏற்படும் - இராஜாங்க அமைச்சர்
gazette
SriLanka
Chiken
lasantha alagiyawanna
By Chanakyan
சந்தைகளில் இந்த நாட்களில் கோழி இறைச்சிக்குப் பற்றாக்குறை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகப் புத்தாண்டு கால விருந்துபசாரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் அசௌகரிய நிலையை எதிர்நோக்கியுள்ள தாகச் சந்தை வட்டாரங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.
விநியோகிப்பதற்கு போதுமானளவு கோழி இறைச்சி கிடைக்காமையால், அதனை விற்பனை செய்யும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. புத்தாண்டு காலப்பகுதியில் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படவில்லை.
இதன் காரணமாகவே கோழி இறைச்சிக்கான தட்டுப்பாட்டு நிலவுவதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இந்தநிலை தொடருமாயின், நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, கோழி இறைச்சி தொடர்பான புதிய வர்த்தமானியை வெளியிடும் நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.