பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் முக்கிய வழக்குகளை இலக்குவைக்கும் பிரதம நீதியரசர்
பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சட்டவிரோத சொத்துகள்
“பொதுச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்திய மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவதுடன், அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகள் மற்றும் பணத்தை மீண்டும் அரசிடம் பெற்றுக்கொள்வதற்கும் அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

திருட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல், முறைகேடாகப் பெற்ற சொத்துகளை மீண்டும் அரசிடம் கொண்டுவருவதற்கான சட்ட சீர்திருத்தங்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, குற்றச் செயல்கள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை மீளப் பெறுவதற்கான சட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,000 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதிகள் தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றனர்.
[PGYK7RB ]
நீதியரசரின் பணி
குறிப்பாக பிரதம நீதியரசரின் பணியைப் பாராட்டிய அவர், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.

நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம், மக்களுக்கு மேலும் நெருக்கமானதும் திறமையானதுமான நீதித்துறை அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |