சடலமாக மீட்கப்பட்ட சிறுமி -கோட்டாபய அளித்துள்ள உறுதிமொழி
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்க உறுதியளிப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிள்ளதாவது,
ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.
கோட்டாபய அளித்த உறுதிமொழி
இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.
சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள் என தெரிவித்துள்ளார்..
மாணவியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் வீசியிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
My heartfelt condolences & deepest sympathies to the family of little Fatima Ayesha who was senselessly killed. I pledge to expedite swift action & justice to her family for this vicious crime.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 28, 2022